"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் தலவாக்கலையில் திரண்டது மக்கள் வெள்ளம் (photos)

#Sajith Premadasa #Lanka4
Reha
4 years ago
"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் தலவாக்கலையில் திரண்டது மக்கள் வெள்ளம் (photos)

"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்தோடு தமிழ் முற்போக்குக்  கூட்டணி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணி தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்றது.

எதிர்ப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பூண்டுலோயா வழியாகவும், நுவரெலியா வழியாகவும், ஹட்டன் வழியாகவும் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.
 
அங்கு பிரதான சுற்று வட்டத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்துப்  பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார், எம்.வேலுகுமார் ஆகியோருடன் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றடைந்தனர்.

தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. மக்கள் முன்னிலையில் சஜித் அங்கு உரையாற்றினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4